முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க உறுப்பினர்களுக்கு அதிகாரிகளால் அச்சுறுத்தல்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகள் தமது உறுப்பினர்களை பல தடவைகள்
அச்சுறுத்தியமையை கண்டித்து எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும்
போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம் (17.08.2014) இடம்பெற்ற ஊடக
சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 “காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகள் எமது உறுப்பினர்களை
பல தடவைகள் அச்சுறுத்தியுள்ளனர். 

அத்துடன், கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தினர் செயற்பட்ட
விதம் தமக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது. 

மாபெரும் போராட்டம் 

ஓ.எம்.பி அலுவலகத்தின் செயற்பாடுகள் எமக்கு எதிராகவும் அரசாங்கத்தை
காப்பாற்றும் வகையிலும் உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க உறுப்பினர்களுக்கு அதிகாரிகளால் அச்சுறுத்தல் | Missing Persons Association Been Threatened

கொக்குத்தொடுவாய் புதைகுழி
மூடப்பட்டமை எமக்கு அதிர்ச்சி அளிப்பதுடன் இந்த புதைகுழியைச் சூழ பல மனித
எச்சங்கள் மேலும் இருக்கின்றன என்று தமக்கு தெரிய வருகின்றது. 

அதேவேளை, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எங்களுக்கு எந்தவிதமான
கரிசனையும் இல்லை. இது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்
எந்தவிதமான தாக்கத்தையும் செலுத்தப் போவதில்லை.

மேலும், அச்சுறுத்தல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20ஆம் திகதி கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.