முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) நாவலர் கலாசார மண்டபத்தை, வாக்குச்சாவடியாகப்
பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு (Election Commission of Sri Lanka) கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதமானது, நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர்
ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவிற்கு சர்வதேச இந்துமத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மாவால் உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில்,“ ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் என்ற உன்னத புருஷரைச் சைவத் தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும் அவர் தம் கொள்கைகளை பேணும் நினைவாலயமாக
ஆறுமுகநாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டது.

கடிதம்

பொதுச் செயற்பாடுகளுக்கும்
பொதுச் சேவைகளுக்கும் இந்த மண்டபம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அதன் புனிதத் தன்மையைப் பேணவேண்டும் என்ற விடயம் கவனத்தில்கொள்ளப்படவில்லை.

யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Appeal To Stop Nallur Hall As Voting Place

நாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அங்கு புனிதம் பேண வேண்டிய கட்டாயம், ஆன்மிக ஸ்தலமாக அம்மண்டபம் போற்றப்படவேண்டிய தன்மை மற்றும் ஆசாரங்கள் பேணப்பட வேண்டியதன் அவசியம் முதலான இன்னோரன்ன காரணங்களால் கடந்த காலத்து நிர்வாகங்களோடு முரண்பட்டு இன்று வழக்கில் இந்தக் கலாசார மண்டபம் உள்ளது.

தற்போது, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அதிக கவனம் எடுத்து இந்த மண்டபத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், தேர்தல் முதலான பொதுவிடயங்களில் கடமைக்கு அமர்த்தப்படுகின்றவர்களுக்கு இத்தகைய நடைமுறைகளைப்
பின்பற்றுவதில் நிச்சயம் அசௌகரியம் ஏற்படும்.

கடித பிரதிகள்

அது இக்கலாசார மண்டபத்தின்
புனிதத்தையும் சட்டதிட்ட நடைமுறைகளையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும்.

யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Appeal To Stop Nallur Hall As Voting Place

எனவே, தயவுசெய்து இத்தகைய நிலைமையினைக் கருத்திற்கொண்டு இந்த மண்டபத்தை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தும் செயற்பாட்டைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

என்றவாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் இக்கடித பிரதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகம். தேர்தல்கள் செயலகம்மாவட்டச் செயலாளர் யாழ்ப்பாண மாவட்டம்பிரதேச செயலாளர் , யாழ்ப்பாணம், உதவித் தேர்தல்கள் ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்டம் ஆகியோருக்கும்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.