யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஊர்காவற்துறை (Kayts) காவல் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், காரைநகரை சேர்ந்த 74 வயதுடையரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதியவர் மாயம்
வீட்டில் இருந்து கடற்தொழிலுக்காக நேற்று செவ்வாய்க்கிழமை (17) காலை சென்றவர் மாலை வரையில் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.