முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்களிக்கும் செயன்முறையில் மக்கள் மத்தியில் குழப்பம் : சர்வதேச கண்காணிப்பாளர்கள் கரிசனை

ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு அளிக்கும் செயன்முறை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (Election Commission) கரிசனை வெளியிட்டுள்ளனர்

அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தமது சின்னத்துக்குப் புள்ளடி இடுமாறு பிரசாரம் செய்துவரும் நிலையில், இது விருப்பு வாக்களிப்பு செயன்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU), பொதுநலவாய அமைப்பு (Commonwealth), சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு உள்ளடங்கலாக (ANFRAL)சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

தேர்தல் கண்காணிப்புப் பணி

அதற்கமைய நாட்டுக்கு வருகை தந்திருக்கும் கண்காணிப்பாளர்கள், ஒன்பது மாகாணங்களிலும் பரந்துபட்ட முறையில் தமது தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாக்களிக்கும் செயன்முறையில் மக்கள் மத்தியில் குழப்பம் : சர்வதேச கண்காணிப்பாளர்கள் கரிசனை | Confusion Among People In The Process Of Voting

இந்த நிலையில் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், பொதுநலவாய அமைப்பு மற்றும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (17) கொழும்பில் அமைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முறைமை, வாக்கு எண்ணும் செயன்முறை என்பன தொடர்பில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தனர்.

அதேபோன்று இம்முறை விருப்பு வாக்கு அளிக்கும் முறைமை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதை அவதானிக்க முடிவதாகவும், அதுகுறித்து தெளிவை ஏற்படுத்துவதற்கு ஆணைக்குழு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

விருப்பு வாக்களிப்பு செயன்முறை

அதற்குப் பதிலளித்த ஆணைக்குழு உறுப்பினர்கள், கிராமங்கள் தோறும் விருப்பு வாக்களிப்பு செயன்முறை குறித்து தாம் விளக்கமளித்து வருவதாகத் தெரிவித்தனர்.

வாக்களிக்கும் செயன்முறையில் மக்கள் மத்தியில் குழப்பம் : சர்வதேச கண்காணிப்பாளர்கள் கரிசனை | Confusion Among People In The Process Of Voting

இருப்பினும் வேட்பாளர்கள் சகலரும் பெரும்பாலும் தமக்குப் புள்ளடி இடுமாறு விளம்பரப்படுத்துகின்றனரே தவிர, விருப்பு வாக்கு அளித்தல் தொடர்பில் விளம்பரப்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள், இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாதா என ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கரிசனை வெளியிட்டனர்.

மேலும் தேர்தல் பிரசார முறைகேடுகள் மற்றும் அவற்றை தேர்தல்கள் ஆணைக்குழு கையாளும் விதம் என்பன குறித்தும் பொதுநலவாய அமைப்பு மற்றும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.