தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகமொன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த காட்சியகமானது, “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக
தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் நாளையதினம் (20) திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன் படி, நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் தியாக தீபம் திலீபன் நினைவுச் சதுக்கம்
நாளை வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில்மாவீரர் பெற்றோர்கள் மற்றும்
முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
வரலாற்று புகைப்படங்கள்
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன இதன்போது தொகுக்கப்பட்டு
காட்சிப்படுத்தப்படவுள்ளது.