முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நாளைய(24) தினம் இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின்(npp) மூத்த தலைவர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றம்(parliament) விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் மாத இறுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜித ஹேரத் மற்றும் ஹரிணி அமரசூரிய

தற்போது விஜித ஹேரத்(vijitha herath) மற்றும் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) ஆகியோர் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களாக உள்ளனர். அவர்களுடன் விரைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிடமான ஆசனத்திற்கு லக்ஸ்மன் நிபுணராச்சியும் இணைந்து கொள்ளவுள்ளார்.

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..! | Who Will Be In Npps Interim Cabinet

தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட அமைச்சரவையுடன் ஆட்சியமைக்குமா அல்லது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படலாம் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு,கிழக்கு,மலையக பிரதிநிதிகள்

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக விளக்கினார்.

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..! | Who Will Be In Npps Interim Cabinet

சமரசிங்க தனது உரையின் போது, ​​222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அநுர உட்பட நான்கு பேர் அமைச்சரவையில்

“ஆரம்பத்தில், தோழர் அநுர உட்பட நான்கு பேர் எமது அமைச்சரவையில் இருப்பார்கள். மேலும் கலந்துரையாடலுக்கு பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக அமைச்சரவை விரிவுபடுத்தப்படலாம்,” என்றார்.

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..! | Who Will Be In Npps Interim Cabinet

இதேவேளை, புதிய ஜனாதிபதி அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு அமைச்சுச் செயலாளர்களை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின் சமந்த வித்யாரத்ன நேற்று ஆதரவாளர்களுக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளராக முன்னாள் சுங்க அதிகாரியான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.