Courtesy: Thavaseelan
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம்
திலீபனின் 37ஆவது நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல், புதுக்குடியிருப்பு
சந்தை பகுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, தியாக தீபம் திலீபனின் உருவ படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து, மலர்
தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஞ்சலி
இந்த நினைவேந்தலில் வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து
கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.