வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸாருக்கு இன்று (03) பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய உருவம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.