இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள
அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை (Shritharan Sivagnanam) நேரில் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
மாவீரர் தின நினைவேந்தல்
இதன்போது, இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்த
தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் சுவிஸ் அரசின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த ஆண்டுக்கான தமிழ்த் தேசிய மாவீரர் தின நினைவேந்தல்
நிகழ்வுகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.