கிளிநொச்சி – பரந்தன் – பூநகரி வீதியின் செல்வி புரம் பகுதியில் நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் பூநகரி பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்த கனிஷ்டநாதன்(69) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.