வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சியிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
முன்னாள் அமைச்சர் உட்பட மூவர் மீது வழக்கு
அதனையடுத்து, மேலதிக விசாரணையை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை எதிர்தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணை செய்யவுள்ளனர்.
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹமட் ஸாகிர் ஆகியோர் சதொச ஊழியர்களை நீக்கி அரசியல் செயற்பாட்டில் ஈடுபட வைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.