திருகோணமலை – ஹபரண வீதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் வானும் மோதியதில் இன்று (01) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வானின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
கொழும்பில் இருந்து கிண்ணியா
நோக்கி புறப்பட்ட வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், வானின் சாரதியான
கிண்ணியாவை சேர்ந்த இளைஞனே உயிரிழந்தும் உள்ளார்.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் குழுவொன்று தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.