கனடாவின்(Canada) யோர்க் பிராந்தியத்தில் தொலைபேசி ஊடாக பாரியளவு பண மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதியவர்களை ஏமாற்றியே இந்த பண மோசடிகள் இடம்பெற்று வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களது பேரப்பிள்ளைகள் போன்று பேசி தங்களுக்கு ஆபத்து எனக் கூறி முதியவர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண மோசடி
இந்த ஆண்டு(2025) ஆரம்பம் முதல் இதுவரையில் இடம்பெற்ற மோசடிகளினால் 19,000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், தொலைபேசி வழியாகவே அதிகளவான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.