அம்பாறை-கல்முனையில் காதல் விவகாரத்தால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (15) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த
மதியழகன் சஞ்சய் ( வயது-24 ) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
காதல் விவகாரமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த
நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டது.
குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர்
மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன்
மூச்சுக் குழாய் இறுகி மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம்
உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் தொலைபேசி ஊடாக வெளிநாடு ஒன்றிலுள்ள யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில் இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.