பொருளாதாரத்தில் அரச துறையின் வகிபாகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கவனமாக உள்ளது.
உதாரணமாக நெல் கொள்வனவு சபை ஊடாக நெல்லை கொள்வனவு செய்து அரிசி தட்டுப்பாடு வராமல் தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
நாட்டின் நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்கான யோசனைகளை இந்த அரசாங்கம் முன்வைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் தனியார் துறையுடன் இணைந்து செயற்பட இருப்பதை இந்த வரவு செலவுத் திட்டம் காட்டுகின்றது.
அத்துடன், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு அதிகளவான மானியங்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை தயாரித்திருப்பது தெளிவாகின்றது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

