கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று (25) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 62 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீயை அணைக்கும் பணி
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

