இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி
பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் வளமைக்குத் திரும்பச் செய்யும் நோக்கிலும், நாட்டின் பொருளாதார நிலைப்புத் தன்மையைப் பாதுகாத்து மேம்படுத்துதல், அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் அதேநேரம், தேவையற்ற வாகன இருப்புக்கள் பேணப்படுதல், அதிகப்படியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை அதைரியப்படுத்தும் நோக்கிலேயே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இரத்து
அத்தோடு, யாராவது ஒரு இறக்குமதியாளரினால் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 25 சதவீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் குறித்த இறக்குமதியாளருக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கு ஆகக் கூடியது 45 சதவீதம் வரையில் விதிக்கக் கூடியதாக மூன்று சதவீத தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளமை குறுிப்பிடத்தக்கது.