அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மதிப்பாய்வு செய்வதற்கும் பணியாளர் மேலாண்மைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மதிப்பாய்வு செய்து பணியாளர் மேலாண்மை தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
11 அமைச்சுக்கள் மற்றும் 5 மாகாண சபைகளின் கீழ் உள்ள நிறுவனங்களில் உள்ள 4,987 வெற்றிடங்களில் 2,003 வெற்றிடங்களை நிரப்ப அறிக்கை பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
அதன்படி, அந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காகப் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.