இலங்கைக்கான வெளிநாட்டு பணவனுப்பல் கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்கள்
இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 548 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.