இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறிய இழுவைமடிப் படகு நடவடிக்கையை
தடுத்து நிறுத்துமாறுகோரி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்புக்கள்
தெரிவித்துள்ளன.
அதன்படி, குறித்த போராட்டத்தினை எதிர்வரும் 27ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில்(Jaffna) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டமானது இந்திய இழுவைமடிப் படகுகள் தொடர்பில் இந்திய அரசுக்கு விடுக்கும் கோரிக்கை என கடற்றொழில் அமைப்புக்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் கடற்றொழில் அமைப்புக்கள் மேலும் கூறியவற்றை கீழுள்ள காணொளியில் காண்க,
https://www.youtube.com/embed/bNKMUalfR6k