மட்டக்களப்பு(Batticaloa) – காத்தான்குடி காவல்துறை பிரிவில் வீதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் வீதியால் வந்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(03.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இதன்போது, காயமடைந்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.