2025/2026 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி
புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவானது நேற்றைய தினம் (25) திருகோணமலை (Trincomalee) நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
தலைவியாக தெரிவு
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவாகிய இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ்ப்பாணம் (Jaffna) – காரைநகரை பிறப்பிடமாக கொண்டவராவார்.

2005ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Colombo) இவர் சட்டமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

