KPY பாலா
இன்றைய காலகட்டத்தில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரே சிறந்த மனிதனாக காணப்படுகிறார்.
தனது வாழ்க்கை, தனக்கான சேமிப்பு என மக்கள் ஓடிக் கொண்டிருக்க தான் சம்பாதிக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது எல்லாம் பெரிய விஷயம்.
அப்படி மக்களால் கொண்டாடப்படும் பிரபலமாக தன்னால் முடிந்த உதவிகளை செய்த வண்ணம் இருப்பவர் தான் KPY நிகழ்ச்சி புகழ் பாலா.
விளம்பரமா
இவர் மனதார மற்றவர்களுக்கு உதவி செய்துவருவதை சிலர் விளம்பரத்திற்காக தான் என கூறி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் அமுதவாணன் கூறுகையில், பாலா இப்போது மட்டுமல்ல எப்போதும் என்னுடன் தான் இருக்கிறார். மற்றவர்கள் செய்ய தயங்கும் போது ஒருவன் உதவி செய்வதை கிண்டல் செய்வது சரியாக இருக்காது.
அவன் செய்யும் உதவிகளை விளம்பரத்திற்காக செய்கிறான் என ஏன் சொல்ல வேண்டும்.
அரசியல்வாதி, முதல்வர் அல்லது எம்எல்ஏக்கள் விளம்பரத்திற்காக கூட தனது பணத்தை கொடுத்து உதவினால் என்ன அதுவும் காசு தானே என கூறியுள்ளார்.