யாழில் (Jaffna) தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த
இராஜேஸ்கண்ணா சஞ்சிகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த சிறுமி கடந்த 20
ஆம் திகதி தவறான முடிவெடுத்து அதிக மாத்திரைகளை
உட்கொண்டுள்ளார்.
மரண விசாரணை
இந்தநிலையில், அவரது பெற்றோர் அவரை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) அனுமதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.