யாழில் மனைவியை பிரிந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
வங்கி வீதி,
ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் கடந்த சில நாட்களாக மனைவியை பிரிந்து உறவினர் வீட்டில்
வசித்து வந்துள்ளார்.
மரண விசாரணைகள்
அந்தவகையில், தான் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்கப்போவதாக மகளிடம்
கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை அவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

