இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்காவது கடன் தவணையை நாட்டிற்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, மின்சார உற்பத்தி செலவைப் பிரதிபலிக்கும் மின்சாரக் கட்டணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
மின்சார விலை நிர்ணய சூத்திரம்
அதை எளிதாக்கும் வகையில் மின்சார விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதற்கிடையில், ஆரம்பக் கணக்கின் இருப்பு சர்வதேச நாணய நிதியத்தின் அசல் ஒப்பந்தங்களின்படி இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியம் நான்காவது கடன் தவணையை வெளியிடுவதற்கான திட்டத்தை அதன் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.