கொழும்பு தேசிய மருத்துவமனையின், PAC என்ற படக் காப்பகம் மற்றும் தொடர்பு
அமைப்பு ( The Picture Archiving and Communication System ) கடந்த இரண்டு
வாரங்களாக செயல்படாததால், நோயாளிகளுக்கான CT மற்றும் MRI ஸ்கேன்களுக்கான
சந்திப்பு திட்டமிடல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல்களின்படி, கணினி வழங்குநருக்கு பணம் செலுத்தாதது மற்றும் முழு தரவு
சேமிப்பு வலையமைப்பு என்பன செயலிழப்புக்கான காரணங்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது
பல ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனை கதிரியக்க சேவைகளை நெறிப்படுத்த, PAC
என்ற அமைப்பை நிறுவியது.
PAC அமைப்பு
அதன் அறிமுகத்துடன், CT, MRI மற்றும் பிற கதிரியக்க நோயறிதல்கள் தொடர்பான
படங்கள் மற்றும் தரவு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சேமிக்கப்பட்டன.

இந்த அமைப்பு செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள
மருத்துவமனைகள் பின்பற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்திறனை மேம்படுத்தும்
என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தற்போது, PAC அமைப்பு முற்றிலும் செயல்படுவதை நிறுத்திவிட்டது.
இதன் விளைவாக, CT மற்றும் MRI சந்திப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன,
இது நோயறிதல்களுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

