2025ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர்
எஸ்.முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை
தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகளில்…
தொடர்ந்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் 102,387பேர் வாக்களிக்க
தகுதி பெற்றுள்ளனர்.
108வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

40வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
1450
உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
மாற்றுவலுவுள்ளோருக்கான
ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் தனியார் துறைகளில் கடமை
புரியும் ஊழியர்களுக்கு சட்ட விதிகளுக்கு அமைய தனியார் நிறுவனங்களின்
தலைவர்கள் விடுமுறைகளை வழங்கி ஊழியர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறும்
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சுயாதீனமான தேர்தலுக்கு
ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

