கிளிநொச்சி வாக்களிப்பு நிலையம் முன்பாக இரண்டு இளைஞர்கள் வாள்களுடன் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு
நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் கைது
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின் கிளிநொச்சி
நீதிமன்றின் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.




