மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள்
உட்புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
குறித்த முதலையை இன்று (07.05.2025) அதிகாலையில் பிரதேச
மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள்
உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


