கிட்டத்தட்ட போர் முடிவடைந்து ஈழத்தில் 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்களது நிலை குறித்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் Tourist Family.
குறித்த திரைப்படமானது இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் நிலையை காட்டுகின்றது.
அதிலும் இந்தியாவில் அவர்கள் தஞ்சம் அடைந்தாலும் ஈழத்தமிழர்கள் அங்கு எதிர் கொள்ளும் பல்வேறு நிலைமைகளை சித்தரித்து காட்டுகின்றது.
அத்தோடு, ஈழத்தமிழர்கள் அங்கிருக்கும் தமிழக மக்களோடு ஒன்றிணைந்து செயற்பட முனைகின்ற போதும் அவர்களது மொழிநடை ஈழத்தமிழர்களை அந்த சமூகத்திலிருந்து வேறுபட்டவர்களாக சித்தரித்து காட்டுகின்றது.
மேலும் அகதி எனும் வார்த்தைக்கு அப்பால் இந்த திரைப்படத்தில் Tourist Family என்ற சொல் பயன்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் அறியலாம்….

