யாழில் (Jaffna) கடற்கரை பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளம் பெண்ணின் சடலம் நேற்று (04) பிற்பகல் யாழ். பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவன் வெளிநாட்டில் உள்ளதாகவும் மேற்படி பெண்ணும் மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

