முல்லைத்தீவு (Mullaitivu) – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (03.06.2025) இடம்பெற்றது.
முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு நேற்றுமுன்தினம் (01.06.2025) மூன்று மாணவிகள் சென்றிருந்தனர்.
அதில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கிய வேளை இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்தனர்.
மாணவியின் இறுதி ஊர்வலம்
இந்நிலையில் மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்டு, குமுழமுனை இளைஞர்களால் குறித்த மாணவிகள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி இரு மாணவிகளும் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த சற்சொரூபநாதன் றஸ்மிளா எனும் மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (03.06.2025) பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.
மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




