ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை கட்டுகஸ்தோட்ட காவல்துறையினர் சோதனை செய்து ஐந்து பெண்களைக் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்குக் கிடைத்த ,இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் கைது
கட்டுகஸ்தோட்ட நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

சம்பவம் தெடார்பில் ககாவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

