யாழில்(Jaffna) மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலமொன்று இன்றையதினம்(9) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

