திருகோணமலை நகர பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இன்று(16)
திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டிக்களி, மட்கோ
நீதிமன்ற வீதி, தபால் கந்தோர் வீதி போன்ற பிரதேசங்களில் நடத்தி செல்லப்படும்
33 வியாபார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைகளில் சுகாதார நடவடிக்கைகளை பேணாத 15 கடைகளுக்கு எதிராக சட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை பிராந்திய
சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


