தேசிய ஊடகக் கொள்கையின் வரைவு, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊடக அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் தமது கருத்துகளைப்
பகிரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை 31ஆம் திகதி வரை இதற்கான கால வரையறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு தேசிய கொள்கை
இலங்கையின் ஊடகங்களுக்கு தேசிய கொள்கை ஒன்று செயற்படுத்தப்பட வேண்டும் என்ற
அடிப்படையில் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும், கடந்த அரசாங்கங்களினால் அந்த
திட்டம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம், அந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

