வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு – கிழக்கில் உள்ள
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தினை பல்வேறு
மட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.
2022இல் 100 நாள் செயல்முனைவு
அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு
ஆவணி மாதம் 1ம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற
அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு ஆவணி
மாதம் முதலாம் திகதி இன்று தொடக்கம் கார்த்திகை மாதம் எட்டாம் திகதி வரை
தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில்
உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
இதன்
முதல் நாளான இன்று 01.08.2025 இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய
பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






