விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (5) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நஷ்ட ஈடு வழங்கப்படும்
தொடர்ந்து பேசிய அவர்,
காப்புறுதி செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு வீடு வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள வீட்டு வசதி பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.