முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கிப் பலியான இளைஞன்! பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின்
தாக்குதலுக்குள்ளாகிய பின்னர் காணாமல்போன நிலையில் முத்துஐயன்கட்டுக்
குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர், நீரில் மூழ்கியே
உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அனுமதியின்றி நுழைந்த ஐந்து பேர்

“முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ்
நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை
அப்புறப்படுத்துவதற்குச் சில நாள்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கிப் பலியான இளைஞன்! பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை | Army Chase Ends In Lake Tragedy

இதன்போது, 07.08.2025 ஆம் திகதியன்று இரவு வேளையில் அகற்றப்பட்ட இரும்பு
மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்லதற்காக அதன் முகாம்
வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐந்து பேரை விரட்டியடிப்பதற்காக
முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அதில் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி
உயிரிழந்துள்ளார்.

 பொலிஸ் விசேட குழு

இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட குழுவால் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கிப் பலியான இளைஞன்! பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை | Army Chase Ends In Lake Tragedy

மேற்படி நபர்கள் முகாம் வளாகத்தினுள் நுழைந்தபோது, முகாமிலுள்ள
உத்தியோகத்தர்கள் அவர்களைக் கண்டு விரட்டியடிக்க முற்பட்ட போது, இதன் விளைவாக,
உள்ளே நுழைந்தவர்கள் தாக்கப்பட்டது தெரியவந்ததன் காரணமாக சிப்பாய் ஒருவரையும்
கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், முகாமுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவத்தை மேற்கொள்வதற்காக இந்தக்
குழுவுக்கு உதவிய மேலும் இரண்டு சிப்பாய்களும் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

உடல் பிரேத பரிசோதனை

அவர்கள் மூவரையும் 09.08.2025 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று சந்தேகநபர்களையும்
19.08.2025 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.

முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கிப் பலியான இளைஞன்! பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை | Army Chase Ends In Lake Tragedy

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் எந்தவித செல்வாக்கும் இல்லாமல்,
வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து
அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து
வருகின்றனர் என்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.