இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனைச் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(12) காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டம், நெடுந்தீவின் வீதி
புனரமைப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி, மாவட்ட அபிவிருத்தி மற்றும்
குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பான விவரங்களை அரச அதிபரிடம்
சிறீதரன் கேட்டறிந்து கொண்டார்.


