முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்லூரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: காவல்துறை வெளியிட்ட தகவல்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு காவல்துறையினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வரும் நிலையில் எதிர்வரும் வாரம் நல்லூர் ஆலயத்தில் விசேட உற்சவங்கள் இடம் பெறும்.

விசேட காவல்துறை அணியினர் 

இந்த நிலையில், ஆலயத்திற்கு வருகை தரும் பெருமளவான பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், திருட்டுக்களை தடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து விசேட காவல்துறை அணியினர் நல்லூர் ஆலய பாதுகாப்பு என வரவழைக்கப்பட்டுள்ளதாக ஜெயமகா தெரிவித்துள்ளார்.

நல்லூரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: காவல்துறை வெளியிட்ட தகவல் | Special Security Arrangements Nallur Temple

அத்தோடு, சிவில் மற்றும் சீருடையில் சுமார் 600 காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தென்பகுதி மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து திருட்டுடன் தொடர்புடைய பல்வேறு சந்தேக நபர்களை இனங்காணக்கூடிய காவல்துறை அணியொன்றும் நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் புகைப்படங்கள்

குறிப்பாக ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களும் தொடர்புடையவர்கள் தொடர்பிலான புகைப்படங்களையும் ஆலய நுழைவாயில்களில் காட்சிப்படுத்த வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: காவல்துறை வெளியிட்ட தகவல் | Special Security Arrangements Nallur Temple

அவ்வாறு புகைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டவர்கள் யாராவது ஆலய வளாகத்தில் இனம் காணப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் உரிய சந்தேகநபரை விரைவில் கைது செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் காவல்துறை அத்தியட்சகர் ஜெயமகா வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, காவல்துறையினரால் பல்வேறுபட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.