நீதித்துறை முடிவுகள் குறித்து தனிநபர்கள் மற்றும் யூடியூபர்கள் சமீபத்தில்
சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்துகள் மற்றும் கணிப்புகள் குறித்து இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்கள் சட்டத்தின் ஆட்சியையும் நீதித்துறையின் மீதான பொதுமக்களின்
நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக எச்சரித்துள்ளது.
வழக்குகளின் முடிவுகள்
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,

சுயாதீன நிறுவனங்களான நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் நீதித்துறையின் கீழ் உள்ள
விடயங்களை குறிவைத்து இந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் மற்றும் இரண்டு சிரேஷ்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட
நீதிச்சேவை ஆணைக்குழு, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் பிற நீதித்துறை
அதிகாரிகளின் நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் ஒழுங்கு
கட்டுப்பாட்டை மேற்பார்வையிடுகிறது.
நீதித்துறையின் சுதந்திரம் வெளிப்புற தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட
வேண்டும் என்றும், வழக்குகளின் முடிவுகளை பாதிக்க முயற்சிக்கும் பொதுவெளியில்
கூறப்படும் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் உரிய செயல்முறையை அச்சுறுத்தும்
என்றும் அந்த சங்கம் வலியுறுத்தியது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அத்தகைய தலையீட்டைச் செய்பவர்கள் அரசியலமைப்பின் பிரிவு 111(C)(1) மற்றும் (2)
இன் கீழ் சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை சட்டத்தரணிகள்
சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது நீதித்துறையில் தலையிடுவதற்கு எதிராக தண்டனை விதிகளை வழங்குகிறது.
சட்டத்தின் ஆட்சி, உரிய செயல்முறை மற்றும் குடிமக்களின் உரிமைகள் மற்றும்
சுதந்திரங்களை எல்லா நேரங்களிலும் பாதுகாக்கசட்ட அமுலாக்க அதிகாரிகள் உட்பட
அனைத்து பங்குதாரர்களும் முன்வர வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.

