அரசாங்கத்தின் அஸ்வெசும நலத்திட்டத்தில் சேர்ந்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட
சிரேஸ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை இன்று, அவர்களின்
வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி உதவிகள் சபை இதனை அறிவித்துள்ளது.

சபையின் தகவல்படி, 599,730 பயனாளிகளுக்கு மொத்தம் 2,993,791,000 ரூபாய்
விநியோகிக்கப்படவுள்ளது.

