முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் மக்களின் காணியை கோரிய விமானப்படை! ரவிகரன் எம்.பி கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக
விவசாயக் காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல
அபகரிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன், விமானப்படையினரின் இக்கோரிக்கைக்கு தமது கடுமையான
எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத்
தெரிவிக்கையில்,

படையினரால் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த குறித்த காணி
விடுவிப்புச் செய்யப்பட்ட நிலையில், அக்காணியில் மக்கள் விவசாய நடவடிக்கையில்
ஈடுபட்டுவருகின்றனர்.

மக்கள் தொடர்ந்து போராடி

அந்தக் காணியினை விமானப்படை தமக்குத் தருமாறு மீண்டும்
கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.

முல்லைத்தீவில் மக்களின் காணியை கோரிய விமானப்படை! ரவிகரன் எம்.பி கடும் எதிர்ப்பு | Air Force Claimed Land From People Of Keppapulavu

அத்தோடு இன்னும் 190 ஏக்கர் அளவில் மக்களுக்குரிய காணிகள் கேப்பாப்பிலவில்
விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்க வேண்டுமென
கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்து போராடியும், கோரிக்கைகளை முன்வைத்தும்
வருகின்றனர்.

இவ்வாறிருக்க மீண்டும் விமானப்படையினர் விடுவிக்கப்பட்ட மக்களின் காணியினை
கோருவது வேடிக்கையாகவுள்ளது.

யாருடன் யுத்தம் செய்யப் போகின்றனர்

யுத்தம் மௌனிக்கப்பட்டு ஒன்றரைத் தசாப்தகாலத்திற்கு மேலாகியுள்ள நிலையில்
மக்களின் காணிகளை அபகரித்து இங்கிருந்து கொண்டு விமானப்படையினர் யாருடன்
யுத்தம் செய்யப்போகின்றனர்.

முல்லைத்தீவில் மக்களின் காணியை கோரிய விமானப்படை! ரவிகரன் எம்.பி கடும் எதிர்ப்பு | Air Force Claimed Land From People Of Keppapulavu

எனவே கேப்பாப்புலவு மக்களின் விவசாயக் காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு
ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இதன்போது தனது கடுமையான எதிர்ப்பினை
வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்  துரைராசா ரவிகரனின்  கடுமையான
எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என 29.08.2025 இடம்பெற்ற முல்லைத்தீவுமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.