பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பசறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள்28 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பாக பசறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


