கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடருந்தில் பட்டா ரக லொரியொன்று மோதியதில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள தொடருந்து கடவையில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா-மன்னார் பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த தொடருந்து தடுப்பு செயல்படாததால் கடவையை லொரி கடக்கும் போது தொடருந்து மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், லொரியில் பயணித்த தந்தை, தாய் மற்றும் 4 வயது சிறுமி ஆகியோர் விபத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் குறித்து வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

