முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் காற்றாலை விடயம் தொடர்பில் அக்கறை கொள்ளாத நிபுணர்கள் குழு

காற்றாலை,கணிய மணல் தொடர்பாக மன்னாரிற்கு வருகை தந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கரிசனை கொண்டதாக இல்லை என  பொது அமைப்புக்களின் ஒன்றிய
தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காற்றாலை ,கணிய மணல் விடயம் தொடர்பாக கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து
உரையாடினோம்.

காற்றாலை விடயம்

இதன் நிமித்தம் ஒரு மாத காலம் இடை நிறுத்தப்பட்ட வேலைத்திட்டம்
தொடர்பாக நிபுணர்கள் குழு மன்னாரிற்கு விஜயத்தை மேற்கொண்டு சிவில்
அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து அது சம்பந்தமான உரையாடல் ஊடாக
தீர்மானத்திற்கு வரலாம் என ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.

மன்னார் காற்றாலை விடயம் தொடர்பில் அக்கறை கொள்ளாத நிபுணர்கள் குழு | Windmill Sand Issue In Mannar

அதன் பிரகாரம் மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் துறை சார்
திணைக்களங்கள் குழுவாக நியமிக்கப்பட்டு,நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மாலை
மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஏற்கனவே அமைக்கப்பட்ட 30 காற்றாலைகளின் உடைய
பிரச்சினைகள் தொடர்பாகவும்,இனி அமைக்கப்படவுள்ள காற்றாலைகளால் ஏற்படவுள்ள
பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் அவர்களுடைய வாதங்கள்
அமைந்திருந்தது.

கரிசனை இல்லை

எங்களுடைய கோரிக்கையாக இருந்த மன்னார் தீவு பகுதியில் காற்றாலை,கணிய மணல்
திட்டத்தை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்கிற விடயம் தொடர்பாக அவர்கள்
அவதானம் செலுத்தியதாக இல்லை.

மன்னார் காற்றாலை விடயம் தொடர்பில் அக்கறை கொள்ளாத நிபுணர்கள் குழு | Windmill Sand Issue In Mannar

எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக
இல்லை.அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு
அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக் களும்,வாதங்களும்
அமைந்திருந்தது.

எனினும் மக்களினுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு இடமாற்றத்தை ஏற்படுத்தி
மக்களினுடைய வாழ்வாதார வாழ்வியல் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய
குறித்த இரு திட்டங்களையும் மன்னார் தீவில் இருந்து வெளியே எடுப்பது
சம்பந்தமாக அவர்களுடைய பார்வை இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.