திருகோணமலையில் (Trincomalee) வாத்திய கலைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர் மூதூர்
தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
கலைஞர் காயம்
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இவ் விபத்து
இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே படுகாயங்களுக்குள்ளாகி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்தவர் திருகோணமலையைச் சேர்ந்தவரென என மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் திருகோணமலையிலிருந்து மல்லிகைத்தீவில் நடைபெறவுள் திருமண வீடொன்றுக்கு
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

