களுத்துறையின் பலாதோட்ட பகுதியில் இன்று(11) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ஒரு கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
அதன்போது, இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் 9 மிமீ துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் சம்பவ இடத்தில் இரண்டு வெற்று தோட்டாக்கள் மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், களுத்துறை பிரிவுக்கான குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் களுத்துறை தெற்கு காவல்துறை இணைந்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

